Web Search

Thursday 30 April 2015

TNDGE Recruitment 2015/Tamil Nadu School Lab Assistant Recruitment 2015



TNDGE Recruitment 2015/Tamil Nadu School Lab Assistant Recruitment 2015

TNDGE Recruitment 2015, Tamil Nadu School Lab Assistant Application form, Notification for 4360 various places at www.tndge.in:
Tamilnadu School Lab Assistant Recruitment 2015 : TNDGLE SAA Application forms are released for the various 4360 empty places. Aspirant who have education and qualification as per notification can apply before last date. www.tndge.in is web portal where all aspirant who are eligible they can make application form and get more details about notification.
As we know Tamilnadu state is one of the largest state. If we look at the population it is sixth largest state of india. TNDGE is going to recruit various post. So very soon aspirant will get chance to make a application and be a part of government.
For more details about TNDGE Recruitment 2015 just log on to site www.tndgte.in
TN Lab Assistant District wise vacancy are available over here so candidate can have more idea about it. Online Application was started on 24th April, 2015 and it will run up to 06th May, 2015. So very few days are remaining make a apply as soon as possible.
Below are few details which will give you more idea about it just go through it
TN School Lab Assistant Recruitment 2015 Job Details
Number of Post : 4360
Post Name : Lab Assistant
Education : Aspirant who have completed their SSC or 10th Class exam from recognized board are eligible for apply online over here.
Fees : For General, BC, DNC, MBC Candidate need to pay 150. For other there is no fees.
Age : Applicant having age between 18 to 30 years on 01-01-2015 are eligible for apply online over here.
Salary: Selected candidate will able to received Rs 5200/- to Rs 20000/-with grade pay of Rs 2400/-
How to Make A online Application ?
§  Candidate just need to open website www.tndge.in
§  Now just find out Latest Notification Section
§  Where you will see TNDGE Application Link
§  Just open it and fill up necessary details
§  Upload your documents and photogrpah
§  Just take a print of it
Important Dates:
§  Online Application Start Date : 24-04-2015
§  Last date For apply online : 06-05-2015
§  Hall Ticket Download Date : Last week of May, 2015
§  Examination Date : 31-05-2015
  

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)


POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)

TNPSC NOTIFICATION NO.7/2015 DATED.30.04.2015 CLICK HERE...

Monday 20 April 2015

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்

Google sites



 ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு,

 நாளை 21.04.2015 அன்று கோர்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....

 மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல்தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை



'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.

 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும்.

 தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரேநேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது.

 திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்குநடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


விடைத்தாள் மதிப்பீடு: புதிய திட்டம் நிறுத்தம்!





 நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாககோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், முழுமை பெறாமலேயே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
 தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல்-பாஸ்' செய்யும் திட்டத்தால், மாணவர்களின் கல்வித்தரம் பின்னடைந்துள்ளது; 40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்கள் தமிழ் பாடத்திலேயே போதிய வாசிப்பு திறன், அடிப்படை கணித அறிவு இல்லாமல் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரத்தை முன்கூட்டியே அறிந்து போதிய பயிற்சிகளுக்கு திட்டமிடும் நோக்கில், கோவையில்எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 இதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டார பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. தமிழ் பாடங்கள் முழுமையாக, வட்டாரங்கள் அளவில் மாற்றப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.ஆனால், ஆசிரியர்களின் மத்தியில் கிளம்பிய கடும் எதிர்ப்பால் அதிகாரிகள் இத்திட்டத்தை பாதியில் கைவிடவேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதன் படி, பிற பாட விடைத்தாள்கள், வழக்கம்போல் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், ''மாணவர்களின் கல்வித்தரத்தை அடையாளம் காணும் நோக்கில் புதிய நடைமுறை, தொடக்க கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள் சிலர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்ற காரணம் கூறி, எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்,'' என்றார்.

 கல்வியாளர்கள் வருத்தம்

 கல்வியாளர் மற்றும் ஆசிரியர் பாரதி கூறுகையில், ''ஒரு வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள், பிற வட்டார விடைத்தாள்களை திருத்தும்போது, அங்குள்ள கற்றல் முறையில் உள்ள நிறை குறைகளை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட மாணவர்களின் கல்வித்தரத்தை யும் அறிய முடியும். சில ஆசிரியர்களின் வேலை பளுவை காரணம் கொண்டு, கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கவில்லை. பள்ளி தொலைவாக உள்ளது என, அர்த்தமற்ற முறையில் எதிர்ப்பு தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு, விடைத்தாள்களை மாற்றிதிருத்துவதால், ஆசிரியர்களும் வேறுபட்ட கற்றல் முறைகளை அறிந்து கொள்ளலாம்,'' என்றார்.


மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?



பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
 இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது.தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந் துள்ளது. விடைத்தாள்களின்மதிப்பெண்கள் சிடி மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு பாட வாரியாக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

 மதிப்பெண் பட்டியலை தயாரிக்க தேர்வுத் துறைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள்தேவைப்படும் என்றும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம்என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பி.எட்., படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு



பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:

 மே 8ம் தேதி - இந்திய சமூகத்தில் கல்வி; 9ம் தேதி - கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, 11ம் தேதி - கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு, 12ம் தேதி - விருப்ப பாடங்கள், 13, 14ம் தேதிகளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள்நடக்கும்.மே 15ம் தேதி - முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ்,உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் பாடத்தேர்வுகள் நடக்கும்.மே 16ம் தேதி - பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும்; மே 18ம் தேதி- முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல்,வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும்.

 இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


Wednesday 15 April 2015

காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு



மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்காக மே மாதம் நடைபெறவிருக்கும் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு,முதுகலை பட்டயப் படிப்பு, திறந்த வெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகள் மற்றும் பி.எட், தேர்வுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் தேதிகளும் மற்றும் தேர்வுகள் தொடங்கும் தேதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
 இளங்கலை பட்டப்படிப்புகள் (13இ பதிவெண் வரை) மற்றும் பி.எட் (15 அ பதிவெண் வரை) விண்ணப்பங்களை அபராதமின்றி ஏப்ரல் 21 ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன் ஏப்ரல் 28 ஆம் தேதியும் சமர்ப்பிக்கலாம். தேர்வுகள் மே 16 ஆம் தேதி தொடங்குகிறது.முதுகலை மற்றும் தொழிற்சார் பட்டப்படிப்புகள் முதலாம் ஆண்டு (13இ பதிவெண்வரை) விண்ணப்பங்களை அபராதமின்றி 21 ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன்28 ஆம் தேதியும் சமர்பிக்கலாம். தேர்வுகள் மே 23 ஆம் தேதி தொடங்குகிறது.எம்.பி.ஏ, எம்.சி.ஏ., சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டயப்படிப்பு, திறந்தவெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புகள் (13இ பதிவெண் வரை) விண்ணப்பங்களை ஏப்ரல் 27 ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன் மே 4 ஆம் தேதியும் சமர்பிக்கலாம். தேர்வுகள் மே 27 ஆம் தேதி தொடங்குகிறது.

 14அ, 14இ, 15அ (பி.எட் நீங்கலாக) பதிவெண் கொண்ட மாணவர்களின் அல்பருவப் படிப்புகளுக்கான தேர்வுகள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களும் பின்னர் தெரிவிக்கப்படும். தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் அனைத்து முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ பட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு முன்னர் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வுக்கால அட்டவணையை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு நுழைவுச்சீட்டில்பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதிகாரியின் சான்றொப்பம் பெற்று தேர்வுமையத்திற்கு எடுத்துச் செல்லவும். நுழைவுச்சீட்டுடன் மாணவர்கள் தங்களது சேர்க்கை அனுமதி அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சேர்த்து எடுத்துச் சென்று தேர்வு எழுதலாம் என்று கூடுதல் தேர்வாணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்


ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 வரும் 2015-16 கல்வியாண்டுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைந்துவிட்ட போதும், 40-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் இன்னும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.மிகுந்த வசதி படைத்த மாணவர்கள் மேற்படிப்புகளை, வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதைப்போல, வசதி இல்லாத ஏழை மாணவ, மாணவிகள் வெளிநாடு சென்று படித்து வரும் வகையில் சிறந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது.அதாவது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் ஒரு பருவம் (6 மாதம்) பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில் முழுவதும் அரசு செலவில் படிக்க வைக்கும் திட்டம்தான் இது. ஆண்டுக்கு 25 மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். இவர்களுடன் 5 பேராசிரியர்கள், ஆராய்ச்சிகளைமேற்கொள்வதற்காக அனுப்பப்படுகின்றனர்.தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

 பொதுவாக மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும்.கல்லூரிகள், படிப்பில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, விண்ணப்பங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதற்கு முதுகலை பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அவர்கள் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் முதல் கட்டமாக கல்லூரி அளவில் நடத்தப்படும் தேர்வில் தகுதி பெற வேண்டும். பின்னர் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வு (ஐஇஎல்டிஎஸ்), பேச்சுத் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள்தான் பிரட்டனுக்கு அனுப்பப்படுவர்.இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்கள் பிரிட்டனின் கலை, கலாசாரம், கல்வித் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, உலக அறிவையும் பெற முடிகிறது.ஆனால், இந்தச் சிறந்த திட்டத்தின் மீது பல அரசு கல்லூரிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு உயர் கல்விமன்ற நிர்வாகிகள் கூறியது:கடந்த 2013-14, 2014-15 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஏழை மாணவர்களும், 10 பேராசிரியர்களும் வெளிநாடு சென்று படித்து வந்துள்ளனர்.இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 15 லட்சத்தை தமிழக அரசுசெலவிடுகிறது.

 இப்போது 2015-16 கல்வியாண்டுக்கு இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சியை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான சுற்றறிக்கை 62 அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கடந்த மாதம் அனுப்பப்பட்டுவிட்டது.கல்லூரிகள் மாணவர்களைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 11 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கடைசித் தேதி முடிந்துவிட்ட நிலையில் 20 கல்லூரிகளிலிருந்து 100 விண்ணப்பங்கள் வரை மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள 42 கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை.அதோடு, இந்தத் திட்டம் குறித்து மாணவர்களிடம் போதிய விளம்பரமோ, கல்லூரி அறிவிப்புப்www.ednnet.inபலகையில் அறிவிப்போ இதுவரை செய்யவில்லை என சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரி பேராசிரியர்கள்புகார் தெரிவிக்கின்றனர்.ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகள் அடுத்த ஓரிரு நாள்களில்விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் குறித்து அரசிடம் புகார் அளிக்கப்படும் என்றனர்.திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாண்டில் அரசுக் கல்லூரிகளிலிருந்து 250விண்ணப்பங்களும், இரண்டாம் ஆண்டில் 400 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் ‘நெட்’ தகுதி தேர்வு.



அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
 இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறைசிபிஎஸ்இ ்) நடத்தியது. இதேபோல இந்த முறையயும் யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெட் தகுதித் தேர்வு பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், மானுடவியல், கல்வியியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா, சமஸ்கிருதம் உட்பட 84 பாடங்களுக்கு ஜூன் 28ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வு எழுதலாம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை (16ம் தேதி) முதல்www.cbse.nic.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 15ம் தேதி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.


கல்விச் செய்தி: தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரா...



தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.

 ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு அந்த தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கும், மேலும் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 அவகாசம் தேவையில்லை

 இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவின் மீதான பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் கோரி கடிதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை சுட்டிக் காட்டிய மனுதாரர் தரப்பு வக்கீல்கள் நீதிபதிகளிடம் ‘சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களுக்கும் பொதுவானவை. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன்வைத்து இருப்பவை என்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரத்தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

 இறுதி விசாரணை

 இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதுவே இந்த வழக்கு விசாரணையில் தொடர்புடைய மற்ற அனைத்து மனுக்களுக்கும் பொருந்தும் என்றனர்.எனவே முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த பதிலையே இந்த வழக்கு விசாரணை தொடர்புடைய மற்ற மனுக்களுக்கும் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணயை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Tuesday 14 April 2015

Grammar : The Units of English


What is called a UNIT? 

A Unit is a basic part. There are 5 units many of which bring out the whole.

Units make a word or a sentence complete.

How many Units are there in English?

There are FIVE UNITS.

1.Letters : The Units of English


In English, there are 26 letters.

They are otherwise called Alphabets.

The Alphabets can be written both in Capital Letters and in Small Letters.


Capital Letters are : 

 A, B, C, D, E, F,


 G, H, I, J, K, L,


 M, N, O, P, Q, R,


 S, T, U, V, W, X,


 Y and Z.


 Small Letters are : 

 a, b, c, d, e, f,


 g, h, i, j, k, l,


 m, n, o, p, q, r,


 s, t, u, v, w, x,


 y and z.

2.Words in English:


Words may be of individual letter or a group of letters.

 A word should give a meaning.

 Then only it will be treated as a word.

 Write, speech, My, You, come, go, learn, type, computer, teach, January, India, America, China, God, etc., are words.

 These words give complete meanings. These are correct words.

 Here are many more words and how the words are used in the sentences.

 A : A boy is playing.

 I : I am going to temple.

 We : We are friends.

 He : He is our friend.

 God : God is omnipotent.

 Many : Many people attended the party.

 Lorry : Lorry is used to carry goods.

 Letter : I have posted all the letters.

 Achieve : Achieve something in your life.

 Reporter : The reporter has submitted his report.

 Technology : Technology has improved.

 Signature : Your signature is not clear.

 Fertilizer : Use organic fertilizer for better farming.

 Composition : Submit your composition note book today.

 Father-in-Law : Her father-in-law is a gentle man.

 Enthusiastic : We need enthusiastic workers.

 Independence : India got independence on 15th August 1947.

 International : The two international leaders discussed the border issue.

 Multi-coloured : This book has multi-coloured wrapper.

 Communication : Aim at clear communication.

 Pronunciation : Pronunciation is important in a language study.

3.Phrase


A phrase is a group of words.

It must have some meaning.

It should not contain a finite verb.

If it contains a finite verb, it will be a sentence or clause.

There is not phrase with a finite verb.

Phrases begin with preposition.

Examples of Phrases : 

1.He wishes to learn Music. 

2.She wants to study further. 

3.The stone fell on the ground. 

4.This practice existed in ancient times.

5.The girl with blue eyes is Mary.

6.I like reading books.

7.We may come to Delhi by train. 

8.They have arranged for boarding. 

9.You are most welcome to this palace. 

10.He went to a doctor. 

(The boldened parts are the phrases)

There are three kinds of Phrases, namely.

a.)Noun Phrases:

Let us see what Noun Phrases are.

The Noun Phrase is a group for words which functions as a noun.

It does the work of a noun.

Examples :

1.He wishes to learn Hindi. 

2.Boys enjoy playing cricket. 

3.I like reading comics Books.

4.She pretends to be honest. 

5.What she does is what I like.

6.She is what she reads.

7.Coming to New York is not my priority.

8.Completing my MBA is my first priority.

9.Smoking in this hospital is prohibited.

10.To invite him is to this function is to invite trouble.

 (The boldened parts are the Noun Phrases)


b.)Adjectival Phrases





The adjectival phrases function as adjectives.

It does the work of an adjective.

It qualifies the noun or the pronoun.

Examples :

1.The girl with blue eyes is my sister.

2.He is a soldier of great abilities.

3.A stitch in time saves nine.

4.I saw a bird of a rare species.

5.A girl of high level of intelligence is what is needed for this company.

6.Do not forget to invite him who invited us all to his wedding.

7.This is the school with all the infrastructures and all the modern facilities.

8.An apple a day saves your life for a long time to come.

9.The teacher with wide acceptance and admiration among the students is Mr. Ram.

10.We have to meet Mr. Raja who has joined our company today morning.

(The boldened parts are the Adjectival Phrases)

c.)Adverbial Phrases:


The adverbial phrases function as adverbs.

It is a modifier.

It modifies verb or an adjective or another adverb.

Examples :


1.The Sun rises in the east.


2.He walks not along with us.


3.Man set foot on the moon.


4.The carpenter hit the nail with a hammer.


5.The woman who lives next door is a doctor.


6.We must finish our project before the holidays.


7.Jodie buys two CDs every month.


8.Jack bought the flowers for his mother.


9.I'm saving my money to buy a car.


10.The students all showed up to support the team.


11.Sally brought a painting home from school to show to her mother.


12.The stone fell on the ground.


13.This practice existed in ancient times.

(The boldened parts are the adverbial phrases)


4.Clause:


A clause is a group of words that forms part of a sentence with a subject and a predicate of its own.


Examples :


  • He went to the doctor.
  • We have to take a decision by today.
  • You are welcome to our college.
  • Please, pay attention to what he says.
  • She has taken permission.
  • The dog that bites does not bark.
  • He replied that he would come.
  • As he was ill, he did not come to school.
  • He fled where his pursuers could not follow.
  • He is the tallest student in this whole college.



There are Two Types of Clause. They are :


a.)The Main Clause:

The Main Clause gives the direct meaning with a finite verb.


Examples : 
  •  He went to the doctor. 
  •  She is my best friend. 
  •  The President will dedicate this factory to the nation day after tomorrow. 
  •  I will teach you English online using SKYPE. 
  •  This film is most interesting and most popular. 
  •  He is the person responsible for this accident. 
  •  My wife is a writer. 
  •  You have to take delivery of this parcel in the railway station. 
  •  Be here by 7pm tomorrow. 


Our Professors did not permit me to complete the seminar.

b.)The Subordinate Clause:


The Subordinate Clause will not give a complete meaning. 

This will only support the meaning of the main clause. 
Or some times, this will depend upon the main clause for getting a meaning. 
The subordinate clause will be a part of the main clause. 
Though Subordinate Clause had finite verb, we can not get complete meaning from it. It depends on the main clause for its complete meaning. 

Examples :

As he was ill, he did not come to college yesterday. 
Since she attends the function, she has to go fast. 
Why we did not come to the school is not a matter now. 
The dog that bites does not bark. 
He fled where his pursuers could not follow. 
I am the monarch of all I survey. 
He is the son of whom I met yesterday. 
He replied that we had to pay him by that day. 
We expected that he would abide by our words. 
It is true that he has scored centum in Math. 
(The boldened part of these sentences are Subordinate Clauses)